"மக்கள் பிரதிநிதிகளின் அந்தரங்க உரிமையை தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உண்டு" - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

சசிகலா புஷ்பா தொடர்ந்த வழக்கு ஒன்றில் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
மக்கள் பிரதிநிதிகளின் அந்தரங்க உரிமையை தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உண்டு - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி
x
மக்கள் பிரதிநிதியாக இருந்த மனுதாரரின், அந்தரங்க உரிமை, அவர் யாரை சந்திக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள மக்களுக்கு உள்ள உரிமையை  சமன்படுத்தி பார்க்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அந்த வகையில் ஒரு மக்கள் பிரதிநிதி யாரை சந்திக்கிறார் என்ற உண்மையை அறிந்து கொள்ளும் உரிமை அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு உண்டு என்றும் கூறியது. இந்த வழக்கில் மனுதாரர் கோரிய நிவாரணத்தை அளிக்க  எவ்வித முகாந்திரமும் இல்லை என கூறி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Next Story

மேலும் செய்திகள்