அம்பன் புயலை எதிர்கொள்வது குறித்து ஒடிசா முதலமைச்சர் ஆலோசனை

அம்பன் புயலை எதிர்கொள்வது குறித்து ஒடிசா முதலமைச்சர் அம்மாநில அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அம்பன் புயலை எதிர்கொள்வது குறித்து ஒடிசா முதலமைச்சர் ஆலோசனை
x
அம்பன் புயல் அதிவேக புயலாக மாறி வரும் சூழ்நிலையில் புயலை எதிர்கொள்வது குறித்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், அம்மாநில அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அம்பன் புயல் ஒடிசாவை தாக்கும் என வானிலை மையம் கூறியுள்ளதை அடுத்து, மக்களை பாதிப்புகளில் இருந்து மீட்பதற்கு விரிவான ஏற்பாடுகளை மாநில நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, ஒடிசாவில்17 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணியை, தேசிய பேரிடர் மேலாண்மை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்