பில்கேட்சுடன் உரையாடிய பிரதமர் மோடி - கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பில்கேட்ஸ் உடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சில் உரையாடினார்.
பில்கேட்சுடன் உரையாடிய பிரதமர் மோடி - கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை
x
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளார். சீனா மற்றும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, தனது அறக்கட்டளை மூலம் 700 கோடி ரூபாய் வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் பில்கேட்ஸ் உடன் பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சில் பேசினார். கொரோனா வைரஸ் உலக நாடுகளில் ஏற்படுத்தி உள்ள தாக்கம், வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மற்றும் ஒருங்கிணைந்து வைரசுக்கு எதிராக போராடுவது குறித்து இருவரும் விவாதித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்