இந்தியாவில் 28 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - குணம் அடைபவர்கள் விகிதம் 22.17 %-ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
இந்தியாவில் 28 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - குணம் அடைபவர்கள் விகிதம் 22.17 %-ஆக உயர்வு
x
இந்தியாவில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 396 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதனால்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, 27 ஆயிரத்து 892 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 48 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 872 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ள நிலையில், மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 22.17 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 14 நாட்களில்,  85 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்