சொந்த ஊருக்கு செல்ல பாந்த்ரா ரயில் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள் - விரட்டியடித்த போலீசார்

மகாராஷ்டிராவில் புலம் பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர், மும்பை பாந்திரா ரயில் நிலையத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
x
மகாராஷ்டிராவில் புலம் பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர், மும்பை பாந்திரா ரயில் நிலையத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், மும்பையில் தங்கி பணியாற்றும் தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி மும்பை பாந்திரா ரயில் நிலையம் முன் திரண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அம்மாநில போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனிடையே இன்று இரவு 8 மணிக்கு, மகாராஷ்டிரா மக்களுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்