"வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ.5000" - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்
தலைநகர் டெல்லியில் கடந்த 40 மணி நேரத்தில் புதிதாக கொரோனா நோய் தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கடந்த 40 மணி நேரத்தில் புதிதாக கொரோனா நோய் தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 30 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 5 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும் கூறினார். மேலும், வாழ்வாதாரத்தை இழந்து வாடும் கட்டட தொழிலாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்
Next Story