யெஸ் வங்கி மோசடி - வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்ட ராணா கபூர்

யெஸ் வங்கி நிதி மோசடி தொடர்பாக அந்த வங்கியின் நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை விசாரணையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்ட தகவல் வெளியாகியுள்ளது.
யெஸ் வங்கி மோசடி - வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்ட ராணா கபூர்
x
யெஸ் வங்கி  நிதி மோசடி தொடர்பாக அந்த வங்கியின் நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை விசாரணையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்ல  திட்டமிட்ட தகவல் வெளியாகியுள்ளது. யெஸ் வங்கியில் அவருக்கு இருந்த பங்குகள் அனைத்தையும், கடந்த டிசம்பர் மாதம் விற்பனை செய்த நிலையில், சில சொத்துகளை விற்பனை செய்த விவரமும் தெரிய வந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் டெல்லியில் அவருக்குச் சொந்தமான 3  வீடுகளை விற்பனை செய்துள்ளார். அந்த வீடுகள் கபூரின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் வாங்கப்பட்டுள்ளன. அவரது மனைவி, மகள்கள் பெயரில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் பல வீடுகளை வாங்கி உள்ளதும் அமலாக்கத்துறை விசாரணையில்  தெரிய வந்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்