"ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தலாம்" - யெஸ் வங்கி அறிவிப்பு

யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் செலுத்தவும் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் ஆன்-லைன் சேவைகளை மீண்டும் பயன்படுத்தலாம் என அந்த வங்கி அறிவித்துள்ளது.
ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தலாம் - யெஸ் வங்கி அறிவிப்பு
x
யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து  பணம் எடுக்கவும், செலுத்தவும் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், ஆன்-லைன் சேவைகளை மீண்டும் பயன்படுத்தலாம் என அந்த வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்கள் மூலம் யெஸ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  ஐ.எம்.பி.எஸ், (IMPS), என்.இ.எப்.டி (NEFT ) சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக  அறிவித்துள்ளது. கிரெடிட் கார்டு நிலுவைகள், இதர வங்கிகளில் இருந்து செலுத்த வேண்டிய கடன்களை செலுத்தலாம் என்றும் கூறியுள்ளது. ஏற்கெனவே, கணக்கில் உள்ள பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கலாம் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்