டெல்லி கலவரம் - பலி எண்ணிக்கை 34ஆக உயர்வு - ஜி.டி.பி. மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் தகவல்

வன்முறை பாதிக்கப்பட்ட வடகிழக்கு தில்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி கலவரம் - பலி எண்ணிக்கை 34ஆக உயர்வு - ஜி.டி.பி. மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் தகவல்
x
டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை 200 பேருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலானவர்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடுகளுக்கு திரும்பி உள்ளதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.டி.பி. மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் சுனில்குமார் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு தில்லியில் கடந்த திங்கட்கிழமை முதல் போதுமான அளவு பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

சந்த் பாக் பகுதியில் நடந்த கொடி அணிவகுப்பின்போது பேசிய  டெல்லி காவல்துறை இணை ஆணையர் ஓ.பி. மிஸ்ரா, மக்கள் அச்சப்பட வேண்டாம், பாதுகாப்பிற்காக காவல்துறையினர் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார். இளைஞர்கள் பொது இடங்களில் கூட்டமாக இருக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்


Next Story

மேலும் செய்திகள்