"வீட்டு சாவி தரவில்லை" : அரிவாளை தூக்கி எறிந்த கணவர் - மனைவி தலையில் குத்தி நின்ற அரிவாள்

தலையில் அரிவாள் சொருகி நின்றவாறு வந்த வயதான பெண்மணியால் நெல்லூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டு சாவி தரவில்லை : அரிவாளை தூக்கி எறிந்த கணவர் - மனைவி தலையில் குத்தி நின்ற அரிவாள்
x
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சவட்டமூலுரை சேர்ந்த சேஷய்யா தனது மனைவி ஜெயம்மாவிடம் வீட்டு சாவியை கேட்டதாக தெரிகிறது. ஆனால் ஜெயம்மா நீண்ட நேரமாக கண்டு கொள்ளாமல் வேலை செய்து கொண்டிருந்த‌தால், ஆத்திரமடைந்த சேஷய்யா, அங்கிருந்த அரிவாளை தூக்கி மனைவி மீது எறிந்துள்ளார். இதில் அரிவாள் ஜெயம்மாவின் தலையில் குத்தி நின்றுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தலையில் அரிவாளை எப்படி எடுப்பது என தெரியாமல் திணறிய மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்