"நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவுக்கு மனநலம் பாதிப்பு" - வினய் தரப்பு வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில்புதிய மனு

நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவுக்கு மனநலம் பாதிப்பு என்று வினய் தரப்பு வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு அளித்துள்ளார்
நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவுக்கு மனநலம் பாதிப்பு - வினய் தரப்பு வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில்புதிய மனு
x
நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு மார்ச் 3 ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள  நிலையில், குற்றவாளி  வினய் சர்மாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனது  தாயை கூட அடையாளம் காண இயலாத நிலையில் வினய் உள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்  ஏ.பி.சிங், தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  வினயின் வலது கை எலும்பு முறிந்துள்ளதாகவும்  உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிபதி தர்மேந்தர் ராணா, வினய் சர்மா குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய திகார் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். மனு மீதான விசாரணை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்