கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நிர்பயா பாலியல் குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.
x
நிர்பயா பாலியல் குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை  எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வில் நடைபெற்றது. அப்போது, குடியரசு தலைவர்,வினய்யின் உடல் நலம் குறித்து உரிய முறையில் ஆராயாமல் கருணை மனுவை நிராகரித்துள்ளதாக குற்றவாளி வினய் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வினய் உடல்நலம் குறித்த மருத்துவ சான்று உள்ளிட்ட ஆவணங்கள் அடிப்படையிலேயே "வினய் சர்மாவின்" கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளதாக கூறி வினய்யின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்