மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது - மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த தலைமை நீதிபதி போப்டே அமர்வு, மத்திய அரசுக்கு அத்தகையை உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தார். மேலும், பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மகாத்மா காந்தி என்றும், இது தொடர்பாக மத்திய அரசை அணுகுமாறு, மனுதாரருக்கு தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தி உள்ளது.
Next Story