புதுச்சேரியில் வெங்காய மூட்டையை திருடியவருக்கு அடிஉதை

வெங்காய மூட்டையை திருடியவரை, சுமை தூக்கும் தொழிலாளர்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x
வெங்காய மூட்டையை திருடியவரை, சுமை தூக்கும் தொழிலாளர்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி குபேர்  அங்காடி அருகே, பெங்களூருவில் இருந்து கடைகளுக்கு கொண்டுவரப்பட்ட வெங்காய மூட்டைகளை சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் இறக்கி வைத்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், வெங்காய மூட்டையை திருடிச்செல்ல முயன்றுள்ளார். அதனை பார்த்த சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் அவரை கட்டி வைத்து அடித்துள்ளனர். ஏற்கனவே ஒரு மூட்டை வெங்காயத்தை திருடிச்சென்ற அவர், மற்றொரு மூட்டையை திருட வந்தபோது சிக்கியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்