டாக்டர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை சம்பவம் - நாட்டின் பல நகரங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

பிரியங்கா ரெட்டி படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் தொடரும் நிலையில் இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்க தெலுங்கானா முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
டாக்டர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை சம்பவம் - நாட்டின் பல நகரங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி
x
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில்  கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த 27 வயது பெண் பிரியங்கா ரெட்டி கடந்த வியாழக்கிழமை அன்று இரவு 4 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 

பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது சாத்நகர் பகுதியில் சுங்க சாவடி அருகே அவரின் இருசக்கர வாகனம் பழுதானது. அப்போது உதவுவது போல நடித்த இளைஞர்கள் அவரை பாலியல் கூட்டுவன்கொடுமை செய்ததுடன், படுகொலையும் செய்தனர். பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் வாங்கி வந்த அந்த இளைஞர்கள் பிரியங்கா ரெட்டி உடலை பாலம் ஒன்றின் கீழ் எரித்தனர்.  

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை அறிந்து விசாரணையில் இறங்கிய சாத்நகர் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். 

லாரி ஓட்டுனர்கள் முகமத் ஆரிப், சென்னகேசவ் மற்றும் கிளீனர்கள் சிவா, நவீன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலையான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நீதிகேட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

விஜயவாடாவில் திரண்ட இளைஞர்களும், இளம்பெண்களும் போராட்டம் நடத்தினர். சிறுமிகளை காப்போம், பெண்களை காப்போம் என்பதை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்திய அவர்கள் முழக்கமிட்டவாறு ஊர்வமாக சென்றனர். 

ஐதராபாத்தில் மக்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். 

லக்னோவில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர்கள் அம்பேத்கர் சிலை முன் அமர்ந்து பிரியங்கா ரெட்டி படுகொலைக்கு நீதி கேட்டு முழக்கமிட்டனர்.

மும்பையில் ஒன்றுகூடிய மக்கள் மெழுவர்த்தி ஏந்தியவாறு பிரியங்கா ரெட்டிக்கு அஞ்சலி செலுத்தினர். 

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து மவுனம் கலைத்த தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி கொலை வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.




Next Story

மேலும் செய்திகள்