பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்த பிரபலங்கள் : சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படங்கள்
காந்தி150- வது பிறந்த தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடன் நடிகர் நடிகைகள் ஆர்வமாக செல்பி எடுத்து கொண்டனர்.
காந்தி150- வது பிறந்த தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். நிகழ்ச்சியில், முன்னணி நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான், நடிகைகள் கங்கனா ரணவத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தயாரிப்பாளர் போனிகபூர், ஏக்தா கபூர், இம்தியாஸ் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது காந்தியின் போதனைகளை பரப்புவதில் திரைத்துறை பெரும் பங்காற்றுவதாக தெரிவித்த மோடி, 1947 வரையிலான சுதந்திர போராட்ட எழுச்சியையும், 1947 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான நாட்டின் வளர்ச்சியையும் திரைத்துறை எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டனர். பின்னர் பிரதமருடன் நடிகர் நடிகைகள் ஆர்வமாக செல்பி எடுத்து கொண்டனர்.
Next Story

