ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
x
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் சிறையில் உள்ள சிதம்பரத்தின் காவல் வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது.  சிதம்பரம் சார்பில் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு,  உச்ச நீதிமன்றததில் நாளை விசாரணைக்கு வருகிறது. இதுதொடர்பாக இன்றுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சிதம்பரம் தரப்பின் சில வாதங்களை உயர் நீதிமன்றம் ஏற்றது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்