பசுமைப் பட்டாசை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் ஹர்ஷவர்தன்

தீபாவளிக்கான பசுமை பட்டாசுகளை மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
x
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பசுமை பட்டாசுகள் மூலம் மட்டுமே அனைவரும் இந்த தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கேட்டுக் கொண்டார்.  அப்போது பேசிய அவர் சிவகாசியில் இதுவரை 230 தொழிற்சாலைகள் அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு புதிய பசுமை பட்டாசு தயாரிப்புக்கு மாறி விட்டதாக கூறினார். புதிய பசுமை பட்டாசு மூலம் 30 சதவிகிதம் மாசு குறையும் என்று குறிப்பிட்ட அவர், பசுமை பட்டாசுகளில் அதற்கான க்யூ ஆர் கோடு மற்றும் சான்றிதழ் இருக்கும் என்றும், அதைத்தான்,  விற்கவும், வெடிக்கவும் முடியும் என்றும் அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்