புதுச்சேரியில் 3 தினங்களில் வெளிநாட்டு மணல் விற்பனை தொடக்கம் - அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரியில் 3 தினங்களில் வெளிநாட்டு மணல் விற்பனைக்கு வரும் என பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 3 தினங்களில் வெளிநாட்டு மணல் விற்பனை தொடக்கம் - அமைச்சர் நமச்சிவாயம்
x
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் இன்னும் 3 தினங்களில் விற்பனைக்கு வரும் என பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார் . வைத்திலிங்கத்தை நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்த காரைக்கால்  வாக்காளர்களுக்கு   நன்றி தெரிவிக்கும் விழாவில் முதல்வர் நாராயணசாமியுடன் கலந்து கொண்ட அவர்,   பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.  கர்நாடகாவில் இருந்து புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை பெறுவதற்கு தொடர்ந்து அரசு முயற்சிகளை  மேற்கொள்ளும் என்றும் நமசிவாயம் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்