4ம் கட்டமாக 71 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை தேர்தல் - இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

மக்களவை தேர்தல் நான்காம் கட்ட வாக்குப்பதிவு 71 தொகுதிகளில் வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
4ம் கட்டமாக 71 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை தேர்தல் - இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது
x
மக்களவை தேர்தல் நான்காம் கட்ட வாக்குப்பதிவு 71 தொகுதிகளில் வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதுவரை 3 கட்டமாக மொத்தம் 303 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்த நிலையில், நான்காம் கட்டத் தேர்தல், 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கு வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் 17 தொகுதிகள், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசத்தில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா 6 தொகுதிகளுக்கு திங்களன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதேபோன்று, பிகாரில் 5 தொகுதிகளுக்கும், ஜார்கண்ட்டில் 3 தொகுதிகளுக்கும், ஜம்மு, காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனந்தநாக் தொகுதியில் மட்டும் 3, 4 மற்றும் 5 ஆம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் பிரசாரம் மேற்கண்ட மாநிலங்களில் உச்சக்கட்டத்தில் நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்