கொல்கத்தாவில் நாளை எதிர்க்கட்சிகள் பேரணி : பா.ஜ.க.வுக்கு எதிரான பேரணிக்கு காங்கிரஸ் ஆதரவு

கொல்கத்தாவில் நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் பேரணிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நாளை எதிர்க்கட்சிகள் பேரணி : பா.ஜ.க.வுக்கு எதிரான பேரணிக்கு காங்கிரஸ் ஆதரவு
x
கொல்கத்தாவில் நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் பேரணிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில், ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் சந்திரபாபு நாயுடு, கே.சந்திரசேகர ராவ் , மாயாவதி, அகிலேஷ் யாதவ் என பல தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் பேரணிக்கு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ளார். தேவகவுடா, ஸ்டாலின் என பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ள நிலையில், ராகுல் காந்தியும் இந்த பேரணிக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த பேரணி மூலம் ஒரு வலிமையான செய்தியை ஆள்பவர்களுக்கு அனுப்ப முடியும் என தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்