"பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது" - வெங்கய்யா நாயுடு
பிரதமர் நரேந்திர மோடியின் சாதுர்ய தந்திரங்கள் என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சாதுர்ய தந்திரங்கள் என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டியுள்ளார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடியை பற்றி எஸ்.வி. சேஷகிரி ராவ் என்ற பேராசிரியர் எழுதிய 'India's Ocean Neighbourhood' என்ற புத்தகத்தை வெளியிட்டார். புத்தகத்தை வெளியிட்டு பேசிய வெங்கய்ய நாயுடு, இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக கூறினார். மிகவிரைவில், பொருளாதாரம் மிக்க 3-வது நாடாக இந்தியா திகழும் என்ற அவர், அதற்காக இடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் நாட்டை வளப்படுத்தும் என்று கூறினார்
Next Story