சி.பி.ஐ. இயக்குநராக மீண்டும் அலோக் வர்மா பணியமர்த்தப்பட்டார்...

சி.பி.ஐ. இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில் முக்கிய முடிவு எதுவும் எடுக்கக் கூடாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
x
சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா பதவி தொடர்பாக, அக்டோபர் 23 ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.  இந்த வழக்கை விசாரித்து  தீர்ப்பளித்த தலைமை ​நீதிபதி அமர்வு, அலோக் வர்மா முக்கிய முடிவு எதுவும் எடுக்கக் கூடாது என்றும், அவரது கோரிக்கை தொடர்பாக உயர்மட்டக் குழு ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அலோக் வர்மாவை நீக்கும் முடிவை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்வு குழு முடிவுக்கு விட்டிருக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்