கடன் தொல்லை : ஒரே குடும்பத்தினர் 6 பேர் தற்கொலை...

கர்நாடகா மாநிலத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
கொப்பல் மாவட்டம் மேதகல் கிராமத்தை சேர்ந்தவர் சேகரய்யா என்பவர், தனது மகள்களின் திருமணத்திற்காக வாங்கிய 6 லட்ச ரூபாய் கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறி வந்துள்ளார். திருமணம் செய்து கொடுத்த இரு மகள்களும் கணவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தாய் வீட்டில் இருந்து வந்துள்ளனர். ஏற்கனவே, கடன் தொல்லை மற்றும் குடும்ப பிரச்சினையால் விரக்தியின் உச்சத்தில் இருந்த சேகரய்யா, தனது மனைவி ஜெயம்மா மற்றும் நான்கு மகள்களை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்