சூதாட்ட கும்பலை பிடிக்க சென்ற காவலர்களை வழி மறித்து கொலை வெறி தாக்குதல்...

ஆந்திர மாநிலம் அனந்த புரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க சென்ற போலீசாரை வழிமறுத்து தாக்கிய கும்பல், போலீஸ் வாகனத்தையும் தீயிட்டு கொளுத்தியுள்ளது.
சூதாட்ட கும்பலை பிடிக்க சென்ற காவலர்களை வழி மறித்து கொலை வெறி தாக்குதல்...
x
ஆந்திராவின் கடப்பா மாவட்டம் அனந்தபுரம் நகரில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றுள்ளனர். அப்போது இடையை வழிமறித்த 30 பேர் கொண்ட ம‌ர்ம கும்பல் ஒன்று, போலீசார் மீது கொலை வெறிதாக்குதல் நடத்தியுள்ளது. தொடர்ந்து ஆத்திரம் அடங்காத அந்த கும்பல் காவல்துறை வாகனங்களையும் தீயிட்டு கொளுத்தியுள்ளது. வாகனம் முழுமையாக எரிந்து தீக்கிரையான நிலையில், காவலர்கள் அனைவரும் படுகாயமடைந்தனர். அதிலும் குறிப்பாக காவல் ஆய்வாளரான அமீத்கான் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்திய கும்பல், தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்