சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இன்று காலை வாரணாசி சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நேராக விழா மேடைக்கு சென்ற பிரதமர், நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து, அரிசி ஆராய்ச்சி மைய அலுவலகத்தை, நாட்டுக்காக அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் காசிப்பூரில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும் அவர், பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story