உர்ஜித் படேல் ராஜினாமா : ரகுராம் ராஜன் கருத்து

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததற்கு, இந்தியர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும் என முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
உர்ஜித் படேல் ராஜினாமா : ரகுராம் ராஜன் கருத்து
x
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததற்கு, இந்தியர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும் என முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.


* அரசு அதிகாரிகள் தங்களது பதவிகளில் இருந்து விலகுவது என்பது, எதிர்ப்பை பதிவு செய்யும் விஷயம் என்று தெரிவித்துள்ள ரகுராம், உர்ஜித் படேலின் ராஜினாமா கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

* உர்ஜித் படேலின் ராஜினாமா குறித்து இந்தியர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள ரகுராம் ராஜன், அவரை இந்த நிலைக்கு தள்ளியது எது என்பது குறித்து ஆராய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

* ரிசர்வ் வங்கியுடனான உறவு குறித்து அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள ரகுராம் ராஜன், உர்ஜித் படேலின் ராஜினாமாவிற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்