திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விவகாரம் : லட்டு வழங்க அட்டை பெட்டி பயன்படுத்த முடிவு

திருமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை அடுத்து பக்தர்களுக்கு லட்டு வழங்க அட்டை பெட்டிகளை பயன்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விவகாரம் : லட்டு வழங்க அட்டை பெட்டி பயன்படுத்த முடிவு
x
திருமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்த கடந்த மாதம் 1-ம் தேதி முதல் தடை விதித்து திருமலை- திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளை எடுத்து செல்ல அதிகளவில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக,  அட்டை பெட்டிகளை பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக ஒரு லட்சம் அட்டைப் பெட்டிகளை சோதனை முறையில் பயன்படுத்தி லட்டு வழங்க உள்ளனர். சோதனை முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் வருங்காலங்களில் அட்டைப் பெட்டியில் அடைத்து லட்டுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்