அனைவரும் வளம்பெற வேண்டும் என்பதே லட்சியம் - பிரதமர் நரேந்திரமோடி
நாட்டில் உள்ள அனைத்து மக்களும் வளம் பெற வேண்டும் என்பதே பாஜகவின் லட்சியம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் நக்வுர் என்ற இடத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், 2022 க்குள், அனைவருக்கும் வீடு உறுதி என்றார். 4 தலைமுறைகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியால் நாடு வளம் பெறவில்லை என கூறிய பிரதமர் மோடி, மக்களின் கனவை நாங்கள் நனவாக்குவோம் என்றார். பாஜகவை எதிர்க்க வழி தெரியாதவர்கள், ஏழைகளையும், விவசாயிகளையும் வைத்து அரசியல் செய்வதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
Next Story