பஞ்சாலை ஊழியர்கள் தற்கொலை போராட்டம் : நிலுவைத் தொகை, போனஸ் வழங்க கோரிக்கை
சம்பள நிலுவைத் தொகை, போனஸ் வழங்க வலியுறுத்தி பஞ்சாலை தொழிலாளர்கள் 10 பேர் தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி ஐயங்குட்டிபாளையத்தில் இயங்கி வரும் அரசுக்கு சொந்தமான ஏ.எப்.டி பஞ்சாலை கிளையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், ஊழியர்கள் 10 பேர் பஞ்சாலை வளாகத்தில் உள்ள 50 அடி உயர தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பள நிலுவைத் தொகையையும், போனஸ் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, ஊழியர்கள் கீழே இறங்கி வந்தனர்.
Next Story