ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் கஜா சேத அறிக்கை அளிக்கப்படும் - டேனியல் ரிச்சர்ட் விளக்கம்

புயல் பாதிப்பு குறித்த அறிக்கை ஒரு வார காலத்திற்குள் தாக்கல் செய்யப்படும் என மத்திய ஆய்வு குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் உறுதி அளித்துள்ளார்.
x
புதுச்சேரி தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமியை, சந்தித்து மத்திய ஆய்வு குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான குழு ஆலோசனை நடத்தியது. அப்போது, புயல் பாதிப்பு தொடர்பான அறிக்கையை அந்த குழுவிடம் முதலமைச்சர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ஆய்வு குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட், புதுச்சேரி அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறினார். ஒரு சில விவரங்களை புதுச்சேரி அரசு வழங்கியவுடன், புயல் சேதம் குறித்த அறிக்கை ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்