கேரள தேசிய நெடுஞ்சாலைகளில் இன்று மறியல் போராட்டம்

சபரிமலைக்கு சென்ற பா.ஜ.க. பொதுச் செயலாளர் சுரேந்திரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று மறியல் போராட்டத்துக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
கேரள தேசிய நெடுஞ்சாலைகளில் இன்று மறியல் போராட்டம்
x
சபரிமலைக்கு சென்ற பா.ஜ.க. பொதுச் செயலாளர் சுரேந்திரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று மறியல் போராட்டத்துக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. நேற்று முன்தினம் இருமுடியுடன் தரிசனம் செய்ய சென்ற  இந்து  ஐக்கிய வேதி அமைப்பின் பொது செயலாளர் சசிகலா, சந்நிதானம் அருகே மரக்கூட்டத்தில்  கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து கேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில், மாலை இருமுடியுடன் வந்த சுரேந்திரனையும்  நிலக்கல்லில் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். சுரேந்திரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று கேரளாவில் நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டத்துக்கு பா.ஜ.க. அழைப்புவிடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்