திருப்தி தேசாய்க்கு எதிராக போராட்டம் : மும்பை விமான நிலையத்தில் முற்றுகை

சபரிமலை கோயிலில் பெண்கள் செல்வதற்காக, வழக்கு தொடர்ந்தவரான திருப்தி தேசாய்க்கு எதிராக மும்பை விமான நிலையத்தில் போராட்டம் நடைபெற்றது.
திருப்தி தேசாய்க்கு எதிராக போராட்டம் : மும்பை விமான நிலையத்தில் முற்றுகை
x
சபரிமலை கோயிலில் பெண்கள் செல்வதற்காக, வழக்கு தொடர்ந்தவரான திருப்தி தேசாய்க்கு எதிராக மும்பை விமான நிலையத்தில் போராட்டம் நடைபெற்றது. மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று கேரளாவுக்கு, திருப்தி தேசாய் சென்றார். 'பூமாதா பிரிகேட்' என்ற அமைப்பை நடத்தி வரும் அவருக்கு எதிராக கேரளாவில் போராட்டம் நடைபெற்றது. இதனால், கொச்சி விமான நிலையத்திலேயே இருந்த திருப்தி தேசாய், பின்னர் மும்பை திரும்பினார். இந்நிலையில், நேற்று இரவு மும்பை விமான நிலையத்துக்கு வந்த அவருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. மும்பை விமான நிலையத்தில், அய்யப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் ஏராளமானோர் கூடி நின்று, திருப்தி தேசாய்க்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்