மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு
x
இந்த ஆண்டு  மண்டல பூஜை அடுத்த மாதம் 27  ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை    திறக்கப்பட்டது. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு  மீண்டும்  நாளை அதிகாலை 4 மணிக்கு கோயில்  நடை திறக்கப்படுகிறது. ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன,  மண்டல பூஜை முடிந்த பின்பு கோயில் நடை அடைக்கப்படும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை மீண்டும் டிசம்பர் 30-ம் தேதி திறக்கப்படும்.  ஐனவரி 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. கோயில் நடை இன்று திறக்கப்படுவதையொட்டி  சபரிமலைக்கு பெண்கள் வரக்கூடும் என்பதால்  ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்