பிரபல ரவுடி கழுத்து அறுத்துக் கொலை

புதுச்சேரி பிள்ளைச்சாவடி பகுதியில் பிரபல ரவுடி ராஜேஷ் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரபல ரவுடி கழுத்து அறுத்துக் கொலை
x
புதுச்சேரி பிள்ளைச்சாவடி பகுதியில் பிரபல ரவுடி ராஜேஷ் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ் மீது, ஆரோவில் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீச்சு, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ரவுடி ராஜேஷ் பிள்ளைச்சாவடி பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் ராஜேஷ் பிணமாக கிடப்பது குறித்து அளித்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜேஷின் உடலை கைப்பற்றி கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்