ரூ. 21 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ஆஜர்

நிதி நிறுவனத்திடம் இருந்து 21 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி பெங்களூரு குற்றபிரிவு போலீசார் முன்பு ஆஜரானார்.
ரூ. 21 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ஆஜர்
x
நிதி நிறுவனத்திடம் இருந்து 21 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட  வழக்கில், தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி பெங்களூரு குற்றபிரிவு போலீசார் முன்பு ஆஜரானார். இந்த வழக்கில் தான் தலைமறைவாக இல்லை என்றும், விரைவில் விசாரணைக்கு ஆஜர் ஆவேன் என்றும் வீடியோ பதிவை ஒன்றை ஜனார்த்தன் ரெட்டி வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ வெளியான சுமார் அரை மணி நேரத்தில் அவர் பெங்களூரு சாம்ராஜ் பேட் பகுதியில் உள்ள மத்திய குற்ற பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரானார். விசாரணை முடிவடைந்த பிறகு அவர் கைது செய்யபடலாம் என்று கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்