அதிரடியாக உயிர் பெற்ற கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வழக்கு

அமலாக்கத்துறை வழக்கை முடித்து தருவதாகக் கூறி தனியார் நிறுவனத்திடம் 21 கோடி ரூபாய் பேரம் பேசிய கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை பெங்களூரு போலீசார் தேடி வருகின்றனர்.
அதிரடியாக உயிர் பெற்ற கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வழக்கு
x
அம்பிடன்ட் என்ற நிறுவனத்தின் மீதான அமலாக்கத்துறையின் வழக்குகளை முடித்து தருவதாக, அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, 21 கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளார். இதற்கான புகைப்பட ஆதாரங்கள் குற்றப்பிரிவு போலீசாருக்கு தற்போது கிடைத்துள்ளது. இதையடுத்து கைது செய்வதற்காக ஆந்திரா மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் ஜனார்த்தன ரெட்டியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஜனார்த்தன ரெட்டி முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்திற்குச் செல்ல இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு நேற்று இடைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிரடியாக உயிர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்