குழந்தையுடன் வேலை செய்யும் பெண் காவலர்
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் காவலர் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கோட்வாலி என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் அந்த பெண் காவலரின் பெயர் அர்ச்சனா. தனது பச்சிளம் குழந்தையுடன் காவல்நிலையம் வரும் அர்ச்சனா தன்னருகே குழந்தையை படுக்க வைத்துவிட்டு, கடமை உணர்வுடன் வேலை செய்கிறார். இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பலரும் பெண் காவலர் அர்ச்சனாவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Next Story