வரதட்சணை தராததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் தலையை மொட்டையடித்த பெண் வீட்டார்

லக்னோவில், வரதட்சணை தராததால் திருமணம் செய்ய மறுத்த மணமகனின் தலையை பெண் வீட்டார் மொட்டையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.
வரதட்சணை தராததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் தலையை மொட்டையடித்த பெண் வீட்டார்
x
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், இன்று திருமணம் செய்து கொள்ளவிருந்த மணமகன் ஒருவர், பெண் வீட்டாரிடம் இருந்து இரு சக்கர வாகனம், தங்க சங்கிலி உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கேட்டுள்ளார். ஆனால், அவற்றை இப்போதைக்கு தர முடியாது என மணமகள் வீட்டார் தெரிவித்துள்ளனர். இதனால், திருமணத்தை நிறுத்துமாறு மணமகன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணமகளின் உறவினர்கள், மணமகனைப் பிடித்து, மொட்டையடித்துள்ளனர். வரதட்சணை கேட்ட மணமகனுக்கு மொட்டை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்