நீதிபதி மனைவி, மகன் மீது துப்பாக்கி சூடு - போலீஸ் விசாரணை
அரியானா மாநிலம் குருக்ராமில் மாவட்ட கூடுதல் நீதிபதி ஒருவரின் மனைவி மற்றும் மகனை கண்மூடித்தனமாக மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் குருக்ராமில் மாவட்ட கூடுதல் நீதிபதி ஒருவரின் மனைவி மற்றும் மகனை கண்மூடித்தனமாக மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செக்டார் 49-ல் அவர்கள் காரில் வந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. படுகாயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story