திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு 9 டன் பூக்கள் அனுப்பும் நிகழ்ச்சி

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின்போது, கோவிலின் அலங்காரத்துக்காக, திருச்செங்கோட்டில் இருந்து 9 டன் பூக்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு 9 டன் பூக்கள் அனுப்பும் நிகழ்ச்சி
x
* திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின்போது, கோவிலின் அலங்காரத்துக்காக, திருச்செங்கோட்டில் இருந்து 9 டன் பூக்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு துளசி, ரோஜா, மல்லிகை, சாமந்தி, தாமரை உள்ளிட்ட வாசனை பூக்களை தொடுத்தனர்.  

* இது தவிர, ரோஜா செடிகள், கரும்பு, தென்னங் குருத்து, பாக்கு, இளநீர் குலைகள், மாங்காய் கொத்து போன்றவையும் திருப்பதிக்கு அனுப்பப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை திருச்செங்கோட்டில் உள்ள திருப்பதி திருமலை ஸ்ரீமன் நாராயண புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் செய்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்