மோசமான கையெழுத்து - டாக்டர்களுக்கு அபராதம்...

உத்தரப் பிரதேசத்தில், மோசமான கையெழுத்துடன் மருந்துச்சீட்டு எழுதிக் கொடுத்த 3 டாக்டர்களுக்கு, தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மோசமான கையெழுத்து - டாக்டர்களுக்கு அபராதம்...
x
* உன்னாவோ நகரில் மருந்துச் சீட்டைத் தவறாகப் புரிந்துகொண்டு மருந்து வழங்கப்பட்டதால் ஒருவர் பாதிக்கப்பட்டார். கோண்டா மாவட்டத்தில் பணிபுரியும் இரு மருத்துவர்களின் கையெழுத்தும் புரியாததால் மேலும் இருவர் பாதிக்கப்பட்டிருந்தனர். 

* லக்னோ நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் டாக்டர்கள் ஜெய்ஷ்வால், பி.கே.கோயல், ஆஷிஸ் சக்ஸேனா ஆகியோருக்குத் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

* உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத்துறை முதன்மைச் செயலருக்கு, மருத்துவர்கள்  மருந்துச்சீட்டில்  தெளிவாக எழுத உத்தரவிடும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கம்ப்யூட்டரில் அடித்து மருந்துச்சீட்டு வழங்கினால் என்ன, என்றும் நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்