செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை

சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவும் வீடியோ
செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை
x
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், டார்ச் லைட் மற்றும் செல்போன் வெளிச்சத்தில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சீரான மின் விநியோகம் இல்லாதது மற்றும் அவசர காலத்துக்கு ஜெனரேட்டர்  இல்லாத காரணத்தால், இங்கு வரும் நோயாளிகளுக்கு, வேறு வழியில்லாமல் இப்படி சிகிச்சை அளிக்கப்படுவதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த மருத்துவமனைக்கு தினமும் 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வரும் நிலையில், போதிய மருத்துவர்கள் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்