காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய வீரர் கழுத்தறுத்து கொலை

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நரேந்திர குமார் என்ற வீரர், பாகிஸ்தான் ராணுவத்தினரால், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய வீரர் கழுத்தறுத்து கொலை
x
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்திய வீரர்களும் திருப்பிச் சுட்டுள்ளனர். அந்த சமயத்தில், எல்லைப்பகுதியில் இருந்த புதர்களை அகற்றச் சென்ற நரேந்திர குமார் என்ற வீரர் மாயமானார். நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ராம்கார்க் பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில், நரேந்திர குமார், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலில் 3 தோட்டாக்கள் பாய்ந்திருந்தாகவும், இது பாகிஸ்தான் ராணுவத்தினரின் செயல் எனவும் பாதுகாப்பு படை வீரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்