மியான்மர் கடற்கரையில் காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கிழக்கு மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மியான்மர் கடற்கரையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மியான்மர் கடற்கரையில் காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
x
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 36 மணி நேரத்தில் தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த தாழ்வு மண்டலம், மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரா, ஒடிசா வழியாக கடந்து சட்டீஸ்கரை அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மத்திய, தெற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்