திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழக பக்தர் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்க கிரீடம் மற்றும் வெள்ளி பாதங்களை காணிக்கையாக தமிழக பக்தர் ஒருவர் வழங்கியுள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவர் குடும்பத்துடன் சென்று திருமலையில் உள்ள அறங்காவலர் குழு தலைவரை சந்தித்தார்.
சுவாமிக்கு காணிக்கையாக 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட 28 லட்ச ரூபாய் மதிப்புடைய தங்க கிரீடத்தையும் , 1 கிலோ 600 கிராம் எடை கொண்ட 2 லட்சம் மதிப்புடைய வெள்ளி பாதங்களையும் அவர் வழங்கினர்.
Next Story