கேரள முதல்வருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை : கேரள மாநிலத்திற்கு ரூ.100 கோடி நிவாரணம்

ஹெலிகாப்டரில் வெள்ளப்பகுதிகளை ஆய்வு செய்த பிறகு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
கேரள முதல்வருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை : கேரள மாநிலத்திற்கு ரூ.100 கோடி நிவாரணம்
x
ஹெலிகாப்டரில் வெள்ளப்பகுதிகளை ஆய்வு செய்த பிறகு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது, வெள்ள மீட்பு பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். பின்னர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களை, ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனிடையே உடனடி நிவாரண நிதியாக கேரள மாநிலத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்