அசாம் எம்.எல்.ஏ. மீது பாலியல் வன்கொடுமை புகார் - நீதி கிடைக்காவிட்டால் தற்கொலை செய்வதாக பெண் வேதனை

அசாம் மாநிலத்தில் எம்.எல்.ஏ. மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
அசாம் எம்.எல்.ஏ. மீது பாலியல் வன்கொடுமை புகார் - நீதி கிடைக்காவிட்டால் தற்கொலை செய்வதாக பெண் வேதனை
x
அசாம் மாநிலத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நிஜாம் உதின் சவுத்திரி. இவர் மீது பெண் ஒருவர், பாலியல் புகார் அளித்துள்ளார். தனது கணவர் உதவியோடு தன்னை, எம்.எல்.ஏ. நிஜாம் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தனக்கு நீதி வேண்டும் எனவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். வழக்கை வாபஸ் பெறுவதற்காக 5 லட்ச ரூபாய் பேரம் பேசுவதாகவும் அந்த பெண் குற்றம்சாட்டி உள்ளார். தனக்கு நீதி கிடைக்காவிட்டால் தற்கொலை செய்யப்போவதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்