"நீட் தேர்வு கணினி மூலம் நடத்தப்படும்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

நீட் உள்ளிட்ட தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
நீட் தேர்வு கணினி மூலம் நடத்தப்படும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
x
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட், ஜேஇஇ மெயின், நெட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் என்றார். 

நீட் தேர்வு, வருடத்தில் பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும் என்றும், இவற்றில் ஒன்றிலோ அல்லது  இரண்டு தேர்வுகளையோ மாணவர்கள் எழுதலாம் என்றும் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். 

பாடத்திட்டம், வினாக்களை தேர்வு செய்யும் முறை, கட்டணம், மாற்று மொழியில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ஜவடேகர் தெரிவித்தார்.

போட்டி தேர்வுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கணினி மையங்களில் இலவசமாக பயிற்சி எடுத்து கொள்ளலாம் என்று கூறிய அவர், இந்த மையங்கள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்