பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு..

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நிதி ஆயோக் கவுன்சிலின் 4வது கூட்டம் இன்று நடைபெறுகிறது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு..
x
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில்,  விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவது, மத்திய அரசு முன் வைத்துள்ள திட்டங்களின் நிலை, மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்